Search This Blog

Thursday, October 6, 2011


Steve jobs
CEO, Apple and PIXER ANIMATION
Steve Jobs passes away |

ஸ்டீவ் ஜொப்ஸ்


அப்பிள் கணனியை கண்டு பிடித்து கணனி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜொப்ஸ் 56 ஆவது வயதில் காலமானார்.
ஸ்டீவ் ஜொப்ஸ¤ம் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணனியை கலிபோர்னியாவின் புறகர் பகுதியில் ஏப். 01. 1976 இல் உருவாக்கினர்.
அதன் பின்னர் கணனி உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணனி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபோர்ட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.
இவர் புதன் கிழமை இறந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அண்மைக்காலமாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1980ல் இவரால் உருவாக்கப்பட்ட அப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதை தனது 21 வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கிய அப்பிள் கணனி மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 இலட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணனி தொழில்நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய அப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜாபாட் மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன்ஸ் உருவாக்கியவர் இவரே.
2003இல் ஐபொட் உருவாக்கப்பட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கும் செய்து ரசித்து வருகின்றனர்.
2007ல் ஐ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து முழு கணனி பயன்பாட்டை கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐபொட் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், கணனி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டெப்லட் பீசி என்ற கம்ப்யூட்டரை, ஐபொட் பின்னுக்குத் தள்ளி 2010 இறுதியில் ஒன்றரைக் கோடி விற்பனையானது.



Monday, September 26, 2011

என் முதல் திரையரங்கு அனுபவம் இது ........

...

நானும் என் தோழித்தங்கை நந்தினியும் அவளது அம்மாவும் 
ஒரு ஞாயிற்றுகிழமை மாலையில் சினிமாவுக்கு போயிருந்தோம் '
அதுதான் என் முதல் திரையரங்கு அனுபவம் என்றதால் அந்த இருட்டு 
அந்த பிரம்மாண்டம் , ஜனக்கூட்டம் , எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது 
ஆனாலும் பிடித்திருந்தது ......


நீண்ட நாட்கள் தொடர்ந்து வேலை , பயங்கர டென்சனுக்கு மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு 
தான் சினிமா போனதே ! நாங்கள் போன நேரத்துக்கே சரியாக திரைப்படமும் ஆரம்பமாகியது ,
அங்கே திரையிடப்பட்ட திரைப்படம் "எங்கேயும் எப்போதும் "
திரைப்படத்தின் ஆரம்பம் படு ஜாலியாக விறு விறுப்பாக இருந்தது .

சமீபகாலமாய் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதில் பெரும் சலிப்பு இருந்தது. அதுவும் மீண்டும் திரைப்பட விநியோகத்திற்காக அரை 

மணி நேரம் கூட உட்கார்ந்து பார்க்க முடியாத படங்களையெல்லாம் மீண்டும் பார்க்க வேண்டிய இம்சையில் இருக்கும் காலத்தில் 

படம் ஆரம்பித்த முதல் ஷாட்டிலிருந்து ஒர் படம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் அதனூடே பயணிக்க வைக்குமா? என்றால் ஆம்

 வைக்கும் என்று அடித்து சொல்லியிருக்கிறார்கள்.  

சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பஸ் இரண்டும் 


விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு 

பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சரவ். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் அனன்யா. இவர்கள் 


யார்? இந்த விபத்து இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் என்ன என்பதுதான் கதை

.


முதல் காட்சியிலேயே தூக்கி போடும் ஒரு பஸ் விபத்துடன் ஆரம்பிக்கும் படத்தில் ப்ளாஷ்பேக்குகளாய்

 நிறைய அத்யாயங்கள் திரையில் விரிந்தாலும், மெல்ல, மெல்ல அதனுள்ளே பயணிக்க வைத்ததற்கு 

காரணம் படு சுவாரஸ்யமான திரைக்கதை.  அனன்யா, சரவ் ஜோடியின் ஒரு நாள் பயணம் குட்டி

 ஹைக்கூ கவிதையென்றால். ஜெய், அஞ்சலி காதல் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் குட்டி சிறுகதைகள்

.  இவர்கள் மட்டுமில்லாமல், பஸ்ஸில் வரும் ஒரு கல்லூரி மாணவன், மாணவிக்கிடையே ஏற்படும்

 ஈர்ப்பு, பயணம் முடிவதற்கு காதலாய் மாறி நம்பர் மாற்றிக் கொள்ளும் காட்சி, புது மனைவியை பிரிய

 முடியாமல் பஸ் ஏற்ற வரும் கணவன், குட்டிப் பெண், சமையல் கார பயணி, ஜெய்யின் ஊர்கார

 பெரியவர். வெளிநாட்டில் ஐந்து வருடமாய் இருந்துவிட்டு முதல் முறையாய் தனக்கு பிறந்த 

குழந்தையை பார்ப்பதற்காக ஊர் திரும்பும் ஒரு பாசக்கார அப்ப, அவரது ரிங்டோன். அனன்யாவின் 


அக்கா, நடுவில் ஏறும் முஸ்லிம் பெண்மணி என்று மேலும் பல குட்டிக் சிறுகதைகளை மிக இயல்பாக 

கேரக்டர்களாய் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர் சரவணன். ஏற்கனவே பாடல் வெளியீட்டன்று
  
கோவிந்தா பட பாடலை பார்த்துவிட்டு மாண்டேஜில் இந்த கலக்கு கலக்கியிருக்கிறாரே என்று 

யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் வரும் மாசமா பாட்டை தவிர எல்லா பாடல்களையும்

 மாண்டேஜிலேயே சொல்லியிருப்பது இயக்குனரில் பலத்தை காட்டுகிறது. க்ளைமாக்ஸின் போது

 அனன்யா, சரவ்வை பார்த்ததும், முகத்தில் தெரியும் ஒரு அமைதியிருக்கிறதே உருக்குகிறது. ஒரு 

நெகிழ வைக்கும் க்ளைமாக்ஸ் உடைய படத்தை படு சுவாரஸ்யமாய் திரைக்கதை அமைத்ததில்

  இயக்குனரின் உழைப்பு பளிச்சிடுகிறது. வாழ்த்துக்கள் சரவணன். உங்களால் முருகதாஸின் 

கம்பெனியில் இன்னும் நாலு புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

எங்கேயும் எப்போதும் – என்னா படம்டா..!! Don’t Miss


  

Sunday, September 25, 2011

i love you daaaaaa



எனக்குப் பிடித்த
பூக்களின்

பட்டியலில்
உன்னையும்

சேர்த்துக்கொள்கிறேன்
நான்

உனக்குப் பிடித்த
விளையாட்டு
பொம்மைகளின்

வரிசையில் என்னையும்
எழுதிக்கொள்கிறாய் நீ.

தபூ சங்கர் ....













ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே 
இருக்கிறது? என்று!"


வீட்டிற்கு 
ஒரு மரம் 
வளர்ப்பார்கள்!
உங்கள் 
வீட்டில் மட்டும் 
ஏன் 
ஒரு மயில் 
வளர்க்கிறார்கள்?


கரையில் நின்றிருந்த 
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன 
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் 
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.

முடியவில்லை..........சலிப்பதில்லை............




































மறப்பதென்றால் 


அது முடியவில்லை.


நினைப்பதென்றால் 


மனம் சலிப்பதில்லை

பெயர் தெரியாத கணம் .......



பார்க்கக் கிடைத்த
கொஞ்சம் வானத்தில்
எனது தனிமையைப் பகிர்ந்துகொள்ள
வரும் போகும் பறவைகள்!

பெயர் தெர்ந்தவை சில
பலவற்றிற்குத் தெரியாது

எங்கிருந்து
எதுவரைக்குமென
யோசிக்குமுன் கடந்துவிடும்
என்னை அவை

நான் யோசித்துக்கொண்டிருப்பேன்
தடயங்களற்றுப்
பறக்கும் சுகத்தை
வீழ்ந்துவிட்ட நட்சத்திரமாய்
என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கும் வானம்

நிஜமாயிருந்தா


'நினைச்சா பொறையேறும்'


நிஜமாயிருந்தா…


நீ செத்திருக்கனுமே


இந்நேரம்!


ஒரு காதலை தெரிவிக்கும்போது .....



ஒரு சிறு பெண்
தயங்கித் தயங்கி
தன் காதலை தெரிவிக்கிறாள்

அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும்
அல்லது ஒவ்வொரு காதலையும்
தெரிவிக்கும்போதும்
அவள் அவ்வளவு
குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்

உண்மையிலேயே அது
புத்தம் புதியதாக இருந்தது
அப்போதுதான் உறையிலிருந்து
பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை
அ து நினைவூட்டுகிறது

அவளுக்கு ஒரு காதலை
எப்படித் தெரிவிக்கவேண்டும்
என்பதுகூட தெரிந்திருக்கவில்லை
அப்போது அவள் வீட்டைப் பற்றி பேசினாள்
அம்மாவைப்பற்றி பேசினாள்
பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்
ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்

அவள் விரும்பியதற்கு
நேர் எதிரானதையே
அவள் பேசினாள்

அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்என்று
அவள் அஞ்சினாள்
ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது
மிகவும் வியப்படைகிறாள்

தற்செயலாக திறந்துவிட்ட
ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்
அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்

அதைச் சொல்லும்போது அவளுக்கு
அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே
நினைவுக்கு வரவில்லை

அதை ஒரு உணர்ச்சிகரமானநாடகமாக
கையாளவே அவள் விரும்பினாள்
ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல
அதைக் கையாண்டாள்

ஒரு காதலைத் தெரிவிப்பது
இன்னொரு மனிதனை முழுமையாக
சந்திப்பது என்பது அவளுக்குத் தெரியாது
அவள் அதை முதலில்
ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்
ஆனால் அந்தச் சந்திப்புநீணடதாக இருந்தது

ஒருவரை முழுமையா சந்திப்பது
அவ்வளவு பாரமானது என்று
அவள் யோசித்ததே இல்லை

அவள் திரும்பிப்போக விரும்பினாள்
அவளுக்கு அவளாக மட்டும் கொஞ்சம்
மூச்சுவிட வேண்டும்போல இருந்தது
ஆனால் அந்த சந்திப்புமுடிவடைவதாகவே இல்லை

அவள்
எல்லாவற்றையும்முழுமையாக
நம்பவிரும்பினாள்
எல்லாவற்றையும் முழுமையாக
சந்தேகிக்க விரும்பினாள்
தனக்கு யோசிக்க
வேறு விஷயஙகளே இல்லையாஎன்று
அவளுக்கு எரிச்சலாக இருந்தது
ஆனால் அவள் அதையே யோசித்தாள்

ஒரு சிறுபெண்
தனது காதலை தெரிவிக்கும்போது
அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்

இந்த உலகத்தின் மீது வைக்கும்
கடைசி நம்பிகையைப்போல
கருணையின்மைகளுக்கு முன்னே
ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல
அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது


குறிப்பு:


இதை இப்படிக் கூட சொல்லலாம்,
'யார் வேணும்னாலும்
உதட்டை....
உடம்பை...
ஏன் உயிரைக்கூட தொடலாம்.
நான் மட்டுமே உன் மனசை....!'

உனக்கு பிடித்தவைகள்

உனக்கு பிடித்தவைகள்
அனைத்தும்
எனக்கு தெரியும்
என்னை உனக்கு
பிடிக்குமா
என்பதை தவிர...

கைகள் மட்டும் கணவரது...

அதே கோவில்....
அதேஅம்மன் .
அதேகுளம..
அதேபடிகள் 
உனக்கு பிடித்த 
அதே பச்சை சேலையில் நான்.. 
என் கரம் பற்றியிருக்கும்
கைகள் மட்டும் கணவரது...

மௌன பூகம்பம் - -வைரமுத்து அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்




பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"

Monday, September 19, 2011


 நச்சுனு! 101 ஒரு காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்!



ஷடி

  1. நான் தொடங்கிய வார்த்தைகளை என்னை விட அழகாகவே முடிக்கிறாய்!!முந்திக்கொள்பவள் நான்என்றால் முற்றுப்புள்ளி நீயாகஇருக்கிறாய்!                                                                                                                                  
  2. என் அன்பு பேசும் மொழிகளை என்னோடு பகிர்ந்து கொள்கிறாய்! பின் நீ, நான் என்னும் ஒருமை ,பன்மையாகிப் போகிறது !
  3. மற்றவர்களிடம்.., ஏன் உன்னிடமே நீ என்னை விட்டுக்கொடுப்பதில்லை!நானென்றால் உனக்கு அவ்வளவு பிரியம்! 
  4. உன்னையும் நான் எங்குமே விட்டுகொடுக்காமல் பேசும் என் உள்ளுணர்வு பிடித்திருக்கிறது !
  5. ஆயிரம் வாட்ஸ் ஓரவிழிப் பார்வையில் அசராமல் என்னை சாய்க்கும் உன் பார்வை!
  6. மைவிழிக் குடைக்குக்கீழ்  மலர்ந்திருக்கிற நிலவு (கண்கள்)! கண்ணிமைக்காமல் கனம்ஒன்றும் அதை பார்க்கப் பிடிக்கும்!
  7. நீயும் உன் நினைவுகளும் இல்லாத நாட்களில் என் உயிர்போன இதயத்தின் "இல்லாத துடிப்புகள்" பிடித்திருக்கிறது !
  8. என் வழியில் நானுனை கூட்டிச்செல்லும் போது எங்கோ நீ தொலைந்து விடுகிறாய் !எனக்கும் பாதை மறந்து விடுகிறதே!உன்னைத் தேடும் தேடல் பிடிக்கும்!
  9. மாலைநேரக் கடற்கரை மணலில் நானும் என் நிலவும் சேர்ந்து ரசிக்கிற சூரிய அஸ்தமனம் ! கோடி கொடுத்தாலும் கொஞ்சம் கூட வேறெங்கும் கிடைக்காத சுகம் அது !
  10. நிலாக்குளிர் நீளும் வரை நீளும் நம் கைப்பேசி உரையாடல்கள், விடிந்த போதும் விடாமல் தொடரும் அழகு பிடிக்கும்!
  11. என் இன்பதுன்பங்கள் யாவும் உன் தோள்களில் மட்டுமே பாரமாக வேண்டும் என்ற உன் கோரிக்கை! பிடித்திருந்தது    !
  12. என் வாழ்கை துணைக்கான தேடல் பட்டியலில் எல்லா இடங்களையும் நீயே ஆக்கிரமித்த உரிமை! பிடிக்கும்!
  13. உன்னோடு நானும் என்னோடு நீயும் இருக்கும் போது ! நம்மோடு நாம் என்று மாறிவிடுகிறோம் நாம்! அது பிடிக்கும்!
  14. நான் உன்னைப்போல அழகிள்ளயேடா ஏன் என்னை போய் தேர்ந்தெடுத்தாய் என்று நான் கேட்ட போது ! நான் உன்னோடு இருந்தால் நீ என்னை விட அழகு என்றாய்! கிறுக்கா அந்த நிமிஷத்தை நான் எப்படி மறக்க முடியும் ?
  15. நிலவிற்கு சிரிக்கத் தெரிந்தால் அது கண்டிப்பாய் உன்னை போலத்தான் சிரித்திருக்கும்! உன் கள்ளசிரிப்பென்றால் எனக்கு  கொள்ளை ஆர்வமடிஅழகா !
  16. எல்லோரையும் போலவே நமக்குள்ளும் சண்டை வரத்தான் செய்கிறது ! பிடிவாதம் யாருடையதாய் இருந்தாலும் விட்டுக்கொடுப்பவன்  நீயாக மட்டுமே இருக்கிறாய்! எனக்காக மட்டும் !
  17. உனக்கும் எனக்கும் அடிக்கடி போட்டிகள் வருகிறது ! உன்னை விட்டுக் கொடுத்து என்னை ஜெயிக்க வைக்கிறாய் நீ !கணவனின்  இலக்கணம் நீதானடா கிறுக்கா !
  18.  என் கண்களும் இதயமும் விழித்திருந்தால் அப்போது உன் நினைவுகள் மட்டுமே எங்கும் பிராதானமாய் இருக்கிறது ! இந்தப் புதிரான காரணம் பிடிக்கும்!
  19. உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்று எனக்கு தெரிவிக்கும் ஆசிரியை ! "உன் கோபம்"! அது ரொம்பவே பிடிக்கும்!
  20. ஒரு வார்த்தை கூட பேசாமல் பேசும் உன் திறமை எனக்கு இல்லையே! அது பிடிக்கும்!
  21. நாமிருவரும் எதிரெதிரில் கடந்து போகும் போது ! நாம் இருவரும் பேசநினைக்கும் வார்த்தைகளை நமக்கு முன்னே நம் கண்கள் பேசி விடுகிறதே! அந்த நுட்பம் பிடித்திருக்கிறது!
  22. கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தாலும் என் கைவிரல்களுக்குல்லேயே இருக்கிறது உன் வாசம்! அது நிறைய பிடிக்கும்!
  23. என்னை விட நீ வசதியேடி? எப்படி நமக்கு ஒத்துவரும் என்றேன்! ஆயிரம் கோடிக்கு நான் அதிபதி என்றாலும் உன் அன்பிற்கு முன் நான் இரப்பவன்  தான் என்றாய்
  24. ஒரு ஓவருக்கு எத்தனை பந்துகள் என்றுகூட தெரியாத போதிலும் ! என்னோடு சேர்ந்து மட்டை விளையாட்டை ரசிக்கிறாய்! எனக்கு பிடித்தது உனக்குப் பிடிக்காமல் போய்விடக்கூடாதே ! என்னை புரிந்துகொண்டமைக்கு நன்றி டா  .!
  25. என்னுடைய நண்பர்களை என்னைபோலவே நீயும் புரிந்து வைத்திருக்கிறாய்! அது பிடிக்கும்!
  26. எனக்கு பிடித்தவைகளை  மட்டுமே உனக்கும் பிடித்தவைகளாய் மாற்றிக்கொண்டாய் ! நான் கொடுத்துவைத்தவன் டா !
  27. பொறாமைக்கோ, கர்வத்திற்கோ, நம்மிடம் வேலையே இல்லை ! இதைவிட வேறென்ன வேண்டும்!
  28. போடா வாடா  என்று யாரழைத்தாலும் பிடிக்காதென்று சொன்னாய்! உன்னை பார்த்த நொடி முதலே அப்படித்தானே கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்! எனக்கு நீ கொடுத்த " விதி விளக்கு " நம் காதலை ஊருக்கு முரசடிக்கிரதடா !!
  29. யாருடைய அதட்டலுக்கும் அசராத நானோ உன் அன்பிற்கு முன் அடிமையானது எப்படியோ தெரியவில்லை! அது பிடிக்கும்
  30. நேரில் கேட்பதற்கு நேர்மாறாய் தொலைபேசியில் கேட்குமுன் வசீகரக் குரல் பிடித்திருக்கிறது !
  31. "கிறுக்கி " யார் கண்டுபிடித்தானோ தெரியவில்லை இந்த வார்த்தையை! நீ என்னை இப்படி அழைக்கையில் எழும் சந்தோஷத்தை நான் சொல்ல வார்த்தை எந்த மொழியிலும் இல்லை!
  32. நாமிருவரும் இணைந்திருக்கையில் நமக்குள் இருக்கும் 'ஒருமை" பிடிக்கும்!
  33. காற்றைப் போல மேன்மயானவனும்   நீ! புயலை போல வலியவனும்  நீயே! அது பிடிக்கும்!
  34. காதல் திரைப்படங்களின் வசனங்கள் நம்மிடம் தோற்றுப் போகிறதை நாம் உணர்ந்திருக்கிறோம்! நம் ஒருநாள் சண்டையே ஒரு படமாக எடுக்கலாம் அழகா !!
  35. என் உயிரோட்டம் எதனால் நடக்கிறதோ தெரியவில்லை., ஆனால் அத்தனைக்கும் நீயே காரணமாய்    இருக்கிறாய் !
  36. நமக்குள் எத்தனை ஒற்றுமை இருப்பினும் ஒரே ஒரு விடயத்தில் என்னை வேற்றுமைப் படுத்தி விடுகிறாய் !  நான் பெண்  என்பதால் உன்னை விட நான் மேல் தான் என்று என்னும் உன் ஆண்மை ! எவ்வளவோ பிடித்திருக்கிறது ! ஆனாலும் நீதான் என்னைவிட மேல்!
  37. சோகங்களில் நான் சுருண்டு விழும் போது ஆழம் விழுதாய் எனக்குள் பரவி என்னை தாங்குகிறாய்! துன்பம் என்னுடையதென்றால் அதற்குரிய வலிகளை  உன்னுடயதாய் ஆக்கிகொள்கிறாய்! என்ன ஆணோ  நீ! பிடிச்சுருக்கு !
  38. எப்படி என்னை பார்த்துக்கொள்வாய் என்று நான் கேட்டதற்கு , குழந்தை மாதிரி என்றாய்.!சந்தோஷம் !என் இரண்டாம் தாய் கிடைத்துவிட்டாள் !
  39. நம் அஞ்சு விரல்களும் ஒன்றோடொன்றாய் இருக்கையில் என் கோடி துன்பங்களும் கால்தூசி ஆகிப்போகிறது !
  40. காதலிக்கும் போது முத்தம் கொடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று உனக்கு நீயே நீதி சொல்லிக்கொண்டு என் உதடுகளில் உன் ஈரம் பதித்தாய் ! கள்ளா  ! அப்போதே என்னைநீ முற்றிலும் வீழ்த்தி விட்டாயடா !!
  41. என் தோள்களில் நீ சாய்ந்திருக்கும் போது சட்டென எழுந்து என்னை ஒரு பார்வை பார்க்கிறாய்! ஐயோ ! எனக்கு ! வார்த்தைகள் வரவில்லையடா ! ஒரு முறை உன்னை கட்டி அனைத்துக் கொள்கிறேனே!  ப்ளீஸ் !
  42.  சொன்னதையே நான் மறுபடி மறுபடி சொன்னாலும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாய் ! சொல்பவன்  நானாக இருப்பதானால் மட்டும்!
  43. ஊரார் பார்வைக்கு நான் கார்மேகம் ! உன் பார்வைக்கு மட்டும் ஏனோ நான் வெள்ளைநிலா !
  44. "போடி லூசு  என்று நீ ஒரு நாள் அழைக்காமல் இருந்தாலும் அன்றிரவு தூக்கம் கெட்டுப்போகிற காரணம் எனக்கு புரியவில்லை அதை தெரிந்துகொள்ளவே உன்னை காதலிக்க ஆசை ! 
  45.  
  46. உன் ஒட்டுமொத்த பிடிவாதத்தையும் யாரோ ஒருத்திக்காய்  விட்டுக்கொடுக்கிறாய்! அந்த யாரோ ஒருத்தி  நான் மட்டும் தான் என்பதை அறிந்தும் உன்னை எப்படி காதலிக்காமல் இருக்க முடியும் !
  47. ரெண்டு நாள் உன்னோடு பேசப்போவதில்லை என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டிக்கிறாய் ! ரெண்டு நொடி கடந்ததும் மறுபடி அழைத்துச் சொன்னாய் ! என்னால உன்கூட பேசாம இருக்க முடியாது செல்லம் !
  48. ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும் போதும் உன் அழகு எனக்கே தெரியாமல் என் பெருமூச்சை பரிசாகப் பெற்றுக்கொள்கிறது !
  49. "நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்தது நம் உறவு ! "நீ" வேண்டும் என்று அது  தொடர்ந்தது! இன்று "நீ மட்டும் " வேண்டும் என்று முடிவிற்கே வந்துவிட்டது! 
  50.  வெகுநாட்கள் என்னைப் பார்க்காமல் இருந்து பின் எனைப்பார்க்கும் போது என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொல்வாய் ! அது பிடித்துப்போனது எனக்கு!
  51. இதழ் முத்தம் பதிக்க எத்தனையோ இடமிருந்தும் உன் நெற்றியில் நான் கொடுக்கிற முத்தத்தை ரசிப்பதாகச் சொன்னாய்!உன்னை அப்போது இன்னும் அதிகமாய் காதலித்தேன் !
  52. இந்த நிமிடம் இறந்து நான் போனாலும் எந்தக்கவலையும் எனக்கில்லை ! என் மேல் அன்பு செய்வதற்காகவே கடவுளால் உலகிற்கு அனுப்பப்பட்ட தேவதையை நான் அடையாளம் கண்டுவிட்டேன் ! 
  53. உன் அதிகாலை உளறல்களில் புதைந்து கிடக்கும் மழழை மொழி கேட்கவே ஏழு சென்மமும் உனைக் காதலிக்கலாம்!
  54.  என் வீட்டில் வீற்றிருக்கும் நிசமான நிலவே ! நீ தூங்கும் அழகினை கால்நூறு   கம்பர் வந்தாலும் வர்ணிக்க முடியாதடி! பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன் ! பறந்து போய்க்கொண்டே இருக்கிறது நிமிஷங்கள் !  
  55.  தமிழ் மொழி நிசமாகவே அமிழ்தினும் இனியது தான் ! ஆனால் அதனினும் இனியது ஒன்றிருக்கிறது ! அது  "உன் தமிழ்" !
  56. மனதிலும் மலர்கொடி உடம்பிலும், என்ன வலியோ, எதுவாய் இருந்தாலும், என் மடியில் படுத்துக்கொண்டே என் கைகளை இறுகப் பிடித்துக்கொள்கிறாய் ! உன் வலிகளை என் வருடல்கள் தீர்த்துவைக்கும் என்ற உன் எண்ணம் பிடிக்கும்!
  57.  என்னை பிடிச்சுருக்கா ? என்று கேட்டேன் ! "ம்ம்" என்றாய்! என்னைப் பார்த்துக்கொள்கிறாயா என்று கேட்டேன் ! அதற்கும் "ம்ம்" என்றாய் ! கேட்ட முதல் நொடியே என்னைப் புரிந்துகொண்டவன்  நீ மட்டும் தான் தங்கமே!! 
  58. சமைக்கத் தெரியுமா? என்று ஒருமுறை கேட்டாய்  !நானோ  அதற்குத் தானே உன்னைக் காதலிக்கிறேன்என்றேன்  குறும்பாக! சமையல் தெரியாத காதலனோடு  தினமும் சண்டை போட வேண்டும் என்ற என்  நெடுநாள் ஆசை இப்போது உன்னால்  நிறைவேறப் போகுதடா 
  59. ஆயிரம் பேர் நம்மை சுற்றி இருந்தாலும் உன் ஒவ்வொரு பார்வையிலும் என்னை மட்டுமே நிறைக்கிறாய் நீ ! இது எந்த காதலிக்கும்  கிடைக்காத வரம் !
  60.  வெளியே எங்காவது செல்லும் போது வெட்கத்தை எல்லாம் எங்கோ தூக்கி எறிந்துவிட்டு என் கைகோர்த்து நடக்கிறாய்! அது பிடிக்கும்!
  61. தவறோ ,சரியோ என் பாதைகள் தெரியவில்லை! அத்தனையிலும் என்னோடே நடந்து வருகிறாய்! அப்படி என்மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கை பிடிக்கும்!
  62.  பிடிக்குமா என்னை ? என்று முதன் முதலாய்க் கேட்டேன்! பிடிக்காது என்றாய்! பதில் சொன்னவனோ  என் நெஞ்சினை அப்போதே ஆக்கிரமித்து விட்டான் 
  63.  யாருக்கும் எந்தத் தீங்கும் நினைப்பதில்லை ! உன்னைத் துன்பப் படுத்துபவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்! நீ என்பது  நானேதான் 
  64.  என்னோடு இருக்க விரும்புகிறாய் ! இன்னும் குறிப்பாய் சொல்லப்போனால்  என்னோடு மட்டும்!
  65. நான் உன்னை காதலிக்கிறேன் ! கொஞ்சம் எனக்காக ! நிறைய உனக்காக !
  66. இருபத்தி நான்கு மணி நேரம் பேசினாலும் அலுத்துபோகாமல் இருக்கிறது நம் தொலைபேசி உரையாடல்கள்! ஆசை பேசும் மொழி கூட சிலநேரம் சலித்துப்  போகக்கூடும் ! அன்பு பேசும் மொழி எப்படி அலுத்துப்போகும் ?
  67.  எனக்குப்பிடித்த பைத்தியக்காரத் தனங்கள் அத்தனையும் உனக்கும் பிடித்திருக்கிறது!பின் எப்படி உன்னை  எனக்குப்பிடிக்காமல் போகும் ?
  68. என் எந்தஒரு செய்கையையும் நீ கேலி பேசுவதில்லை ! அது பிடித்திருக்கிறது!
  69. என் இதயக்கப்பலை மகிழ்ச்சிக்கரைக்கு செல்ல வழிகாட்டும் ஒரே பெரிய  கலங்கரை விளக்கம் நீ ! என் பெண்மைக்கேற்ற  ஆண்மை நீ !!
  70.  இறுக்கமாக என் விரல்களை நீ பிடித்துக் கொள்கையில் இருவரின் வலிகளும் தெரிவதில்லை! வலிகள் பாதை தெரியாமல் எங்கோ ஓடி தொலைந்துவிட்டது !வருடல்களில் வலியை குறைக்கும் இந்த வித்தையை யாரிடம் கற்றுக்கொண்டாய் நீ ?
  71.  அன்பு மட்டும் போதாது காதலுக்கு! நம்பிக்கை அதைவிடத்தேவை என்று சொன்னாய்! அவ்வாறே வாழ்ந்தும் காட்டினாய்! அது பிடித்திருந்தது!
  72.  என்னை சிரிக்க வைக்கும் வழியும் நீ அறிவாய்! அழவைக்கும் வழியையும் நீ மட்டுமே அறிவாய்!
  73.  திசைகள் நான்கு என்றேன்! இல்லை ஒன்றே ஒன்றுதான் என்றாய்! என்னவென்று கேட்டதுமே சட்டென சொல்கிறாய்! "உன் வழி"தானடி கிறுக்கி  உன்னுடையது மட்டும்!
  74. உன் தோள்களில் நான் முதலில் சாயும் போது கண்கள் நனைந்துபோனது ! கடைசி வரைக்கும் நீ நிலைக்கப் போவதில்லையே என்றெனை பயமுறுத்தியது  நெஞ்சு!
  75.  எவ்வளவு பாரங்கள் இருந்தாலும் எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனம்  ! உன் சிரிப்பிர்ற்கு முன்னால் மட்டும் !
  76.  உனக்கு ஏற்றவள் நான் மட்டுமே ! எனக்கு ஏற்றவன்  நீ மட்டுமே!
  77.  நீயில்லாமல் நானும், நானில்லாமல் நீயும் "கம்பி அறுந்த வீணை!
  78.  எப்படி அன்பு செய்வது என்று எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறாய்!  வாழ்கை முழுதும் உன்னிடமே படிக்க விரும்புகிறேனடா!! 
  79. வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்தது போலத்தான் என் உள்ளுணர்வு பேசிக்கொள்கிறது !
  80.  தூக்கமில்லாமல் என் வளர்ச்சிக்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் நீ செய்கிறாய்! அது பிடித்திருக்கிறது !
  81.  எனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் தூண்டுகோல் நீ! நீ மட்டுமாய் இருக்கிறாய் !
  82.  நிமிடத்திற்கு எத்தனை தடவை துடிக்கிறதோ தெரியவில்லை என் நெஞ்சம் ! ஆனால் என் அத்துனை துடிப்பிலும் உன் நினைவுகள் கலந்திருக்கிருக்கிறது 
  83.  உன்னைப்பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும் என் இதயத்துடிப்பில் ஒன்று எங்கோ காணாமல் போய்விடுகிறது !
  84.  பொக்கிஷமாக்கப் படவேண்டிய நினைவுகள் என்று நான் சொல்லிக்கொள்வது  உன் நினைவினை மட்டும் தான்!
  85. என் இதய ஆழத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவன்   ! நீ மட்டும் தான்!
  86.  அளக்கமுடியாத சந்தோஷங்கள் நிறைந்த வாழ்கை ! நீ வந்ததற்குப் பின் சாமி  கொடுத்த வரம் ! கடவுளே வரமாய் எனக்குக் கிடைத்துவிட்டது போல இருக்கிறது !
  87.  நாளை என்ன நடக்குமோ யாமறியேன் ! ஆனால் நடந்து கொண்டிருக்கிற நிமிடங்கள் யாவும் மறக்க முடியாதவை! நீ என்னோடு இருப்பதால் மட்டும்!
  88.  சோக எழுத்துக்களை மட்டும் சுமந்துகொண்டிருந்த  என் வாழ்கை பக்கங்கள் நீ வந்தது முதல் சுகங்களை மட்டும் சுமப்பது புதுமை !
  89. வார்த்தைகளில் இல்லாமல் செயல்களிலும் சந்தோஷத்தை நிகழ்த்திக்காட்டக்கூடிய வலிமை உன்னிடம் மட்டுமே நான் அதிகம் பார்த்திருக்கிறேன்!
  90.  காதல் என்பது எவ்வளவு தூய்மையானதோ அவ்வளவு தூய்மையையும் உணர்ந்தது நீ என்னை காதலித்த போது தான்!
  91.  காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ அதை விட ஆழமான அர்த்தத்தினை எனக்கு நீ தெரியப்படுத்தி இருக்கிறாய்  !
  92.  என் வாழ்க்கைக் கப்பலின் சிறந்த மாலுமி நீ மட்டுமே ! சோகப் புயல்களுக்கு நடுவில் நீ என்னைக் கூட்டிப்போகும் அழகினை அமைதியாய் உட்கார்ந்து கொண்டு ரசிப்பது மட்டுமே என் வேலை!
  93.  உனக்கு மிகவும் இஷ்டமான பொழுது போக்கினை என்பொருட்டு நீ மறந்து போகிறாய் ! என்னோடு இருக்க வேண்டுமென்ற ஒரே ஆசையில் !
  94.  என் இதழ் வாசலில் முதன் முதலில் சிவப்புச்சாயம் பூசியவன்  நீ! நீ மட்டுமே!
  95.  எனக்கென ஒதுக்கப்பட்ட நேரம் இருக்கிறது ! அவை அத்தனையும் உனக்காகவே செலவழித்து கொண்டிருக்கிறேன் நான்! நீ என் வாழ்வில் வந்தது முதல் !
  96. என் ஆதிமுதல் அந்தம் வரை உனக்கு அத்துப்பிடி ! ஆம்., ஏனோ உனக்கு மட்டும்! 
  97. என் ரகசிய தேசத்தின் காவலாளி நீ! உன்னைமீறி என் ரகசியங்கள் எங்கும் போவதில்லை!
  98. நீ ! என் அழகனடா ! அதனால் தான்  உன்னை காதலிக்கிறேன்! 

இதயம


காற்றில் உன்னை தேடி இதயத்தோடு இணைக்க முயற்சித்த ஒவ்வொரு சுவாசமும்,                                                                                                                                                        

தனக்குள் உனக்கொரு இடத்தை கொடுத்து கனத்த இதயம,  

    உன்னுடன் தானடா........






    நான் சாதித்த நாட்களும், வீண் செய்த நாட்களும் துலைந்து போயின,
    நான் உன்னோடு இருக்கும் இந்நாட்கள் மட்டும் என் நாட்குறிப்பேட்டில் ஏறி அழகாய் கண்சிமிட்டுகின்றன..

    என் ஒவ்வொரு அதிகாலை கண்விழிப்பிலும் உன் முகம் பார்த்து,
    பிடிக்காத தேனீரையும் விரும்பிப்பருகும் நொடிபொழுதுகள்.

    உன் கண்களை இன்னும் அழகாய்க் காட்டும் , நீ என்னோடு
    சண்டையிட்ட நிமிடப்பொழுதுகள்.


    நான் இன்னும் உறங்கிக்கொண்டு இருப்பதாய் நினைத்து,
    அதிகாலைகளில் என் நெற்றியில் நீ விட்டு செல்லும் அழகிய முத்த நிமிடத்துளிகள்.

    என் மார்பில் நீயும் , உன் மடியில் நானும், உறங்கிப்போன நேரத்துளிகள்.

    நீ வலியினால் கண்கலங்கும் - வரமா? சாபமா? என்று தெரியாத அந்த நாட்களில்
    தலைகோதி, தோல்கொடுக்கும்போது நீ சிரிக்கும் அந்த நிமிடத்துளிகள்.

    நம் இருக்கமான இரவுகளில் நீ வெட்கப்படும் அழகிய தருணங்கள் நிறைந்த நிமிடங்கள்.

    தெரியாமல் என்னை இடித்து சென்ற முகம் தெரியா பெண்ணை
    சத்தம் வராமல் திட்டிதீர்த்த உன்இதழ்களுக்கு, முத்தமிட்ட நிமிடத்துளிகள்,

    ஈரக்கூந்தலில் கடவுளிடம் எனக்காய் வேண்டிக்கொள்ளும் அந்த நிமிடத்துளிகள்

    கடைசி மழைத்துளியையும் நாம் ஒன்றாக ருசித்த அந்த மாலைநேர மணித்துளிகள்

    எனக்காய் அவசர அவசரமாய் சமைக்க கற்றுக்கொண்டு,தீக்காயத்தோடு சரியாக வேகவைக்காத உணவையும் அழகாய் பரிமாறும் அந்த நிமிடத்துளிகள்

    இப்படி எத்தணையோ நிமிடத்துளிகள்........


    இன்னும் நான் உன்னோடு வாழப்போகும் லட்சக்கணக்கான மணித்துளிகள் ,என் நாட்குறிப்பேட்டில் ஏறி கண்சிமிட்ட முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றன பாவமாய் .....

    நானும் இரக்கமற்றவள் தான்



    தெரிந்தோ தெரியாமலோ, முடிந்தோ முடியாமலோ,
    சாலையோரம் நின்று பிச்சைக்கேட்கும் முதல் சிறுவனோ, முதல் மூதாட்டியோ மட்டுமே என்னிடம் இருந்து கருணை பெறமுடிகிறது,அதற்கு பிறகுவரும் அணைத்து உதவிகேட்போருக்கும் நானும் 
    இரக்கமற்றவள்  தான்....


    எங்கே உண்கிறார்கள், எங்கே உறங்குகிறார்கள் என்ற இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு விடை தேடதோன்றும்,ஆனால் விடை தேட முயற்சித்ததில்லை,நான் கொடுக்கும் ஒரு ரூபாய் நிச்சயம் இதற்கு ஒரு தீர்வாய் இருக்காது, இவர்களுக்கான ஒரு முழுமையான தீர்வை நான் கொடுக்கும்வரை



    நானும் இரக்கமற்றவள் தான் ..........



    என்னுள் சில

    வாழ்க்கை புத்தகத்தின் "சந்தோசம் "எனும் ஒரு பக்கத்தை தேடிக்கொண்டிருந்த நாட்களில் நான் படிக்காமலே விட்டு சென்ற பக்கங்கள் ஏராளம், அப்படி இருந்தும் வாழ்க்கையின் சில பக்கங்கள், வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கற்று தர மறக்கவில்லை,வாழ்க்கையை கற்று தந்த பக்கங்களைத்தான் இப்பொழுது உங்களுக்காய் திறந்து வைக்கிறேன்.மிகச் சிறந்த மனிதனில்லை நான், சரித்திரங்களும், சாதனைகளும் இருப்பதற்கு. இயல்பான மனிதன், என் வாழ்க்கை பக்கத்தில் படிக்க போகும் யாவும் உங்களுக்குள் கடந்த சென்ற ஒன்றாகத்தான் இருக்கும்.

    Sunday, September 18, 2011

    you..............


    **இனிமேல் கவிதை எழுத போவதில்லை
    நீ பேசு... நான் கேட்கிறேன்...!



    சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் எவ்வளவு தூரம்?
    நீ அருகில் இருப்பதற்கும், தொலைவில் இருப்பதற்கும் உள்ள தூரம் தான்!



    கனவுக்கும் நனவுக்கும் மற்றுமொரு வித்தியாசம்
    கனவில் நாம் காதலிக்கிறோம்...
    நனவில் நான் காதலிக்கிறேன்...!


    உறங்கினால்
    உன் மடியிலே உறங்க வேண்டும் ! இல்லையனில் உன் மடியில் இறக்கவேன்டும்



     துடிப்பதை விட உன்னை நினைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு

    "..உன் கனவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா...நீயும் நானும் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது 'பேசியது போதும் வா வீட்டுக்குப் போகலாம்' என்று ஓரமாய் நின்று உன் குடும்பமே கெஞ்சிக் கொண்டிருந்ததே அந்தக் கனவுதான்.."


    கனவில் நீ என்னை ஆயிரங்கால் மண்டபத்திற்கு வரச் சொன்னதன் காரணம் வேலைப்பாடுகள் நிறைந்த அந்த ஆயிரம் கால்களை விட உன் கால்களே அழகென்பதை எனக்கு காட்டத்தானே..!’


    ..என் படுக்கையில் உனக்கு இடம் விட்டுத்தான் எப்பொழுதும் உறங்குகிறேன்…. கனவில் வந்து நீ படுத்துக்கொள்ள..!!




     இன்று காதலர்தினம்.எல்லா காதலரும் ரோஜாத் தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருக்கிறார்கள். நான்
    தோட்டத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறேன்.எல்லோரும் பூப்பறித்துச் சென்ற பிறகு தோட்டத்துக்குள் செல்வேன்.காதலுக்காக பூக்களையெல்லாம் பரிசளித்துவிட்டு காம்புகளோடு நிற்கும் ரோஜாச்செடிகளோடு பரிமாறிக்கொள்வேன், உனக்கான என் காதலை!


    நீ தொடுகிற பூக்களையெல்லாம் என்னால்
    தொட முடிந்ததே இல்லை. நீ தொட்டது
    எப்படி எனக்குத் தெரியும் என்கிறாயா. உன்
    விரல்களைத்தான் பூக்கள் அப்படியே
    வைத்திருக்கின்றனவே. 



     அற்புதமான காதலை
    மட்டுமல்ல
    அதை உன்னிடம்
    சொல்ல முடியாத
    அதி அற்புதமான
    மௌனத்தையும்
    நீதான் எனக்குத்
    தந்தாய்.