Search This Blog

Sunday, September 25, 2011

தபூ சங்கர் ....













ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே 
இருக்கிறது? என்று!"


வீட்டிற்கு 
ஒரு மரம் 
வளர்ப்பார்கள்!
உங்கள் 
வீட்டில் மட்டும் 
ஏன் 
ஒரு மயில் 
வளர்க்கிறார்கள்?


கரையில் நின்றிருந்த 
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன 
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் 
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.

No comments:

Post a Comment