சம்பவங்கள் நிகழ்ந்தாலும்
எனக்கு உன் நினைவுகள்
இல்லாமல் இருக்கவே
முடிவதில்லை ....
இது என்ன
கோழைத்தனமென என்னை நானே
திட்டியும் பயனேதுமில்லை
முன்பெல்லாம் உன்னிடம் பேச தயங்கும்
நான் இப்போது உன் அழைப்புக்காகவே
காத்திருக்கிறேன்
என்ன ஆனாலும் என் உள்ளத்தை
உன்னிடம் கூறவே முடியாது
ஆத்மார்த்தமான அன்பை
பாசத்தை அக்கறையை
காதல் என்னும் தூக்கில் போட
சம்மதிக்கவே முடியாது .........
நீ கூறினால் மட்டும் உண்டு
கனவுகளிலாவது
நீ வர மாட்டாயா?
எதுவும் பேச மாட்டாயா
என தினமும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்
வேண்டாம்
பருவம் ,வயது , என்னை ஆக்கிரமித்தாலும்
நாம் சேர்ந்து
வாழ முடியாது................


No comments:
Post a Comment