Search This Blog

Thursday, July 7, 2011

வெட்கத்தோடு

இந்த குளிர் காற்றினில் சிக்கிக் கொண்டு
நடுங்குது என் உள்ளம்…
என்னவன் மட்டும் என் அருகே வந்து
கட்டி அணைத்து  இமைகளை மூடி
என் இதழ்களை கொஞ்சம் கடித்து கொஞ்சம் சுவைத்து
உள்ளுக்குள் சிரித்து
 வெட்கத்தோடு ஒரு முத்தம் தந்தால்
இந்த குளிர் காற்று கூட
தலை சுற்றி வியர்ந்து போய்
அவன்  முத்தங்களுக்கு பணிந்து போய் விடும்…
ஏன் தெரியுமா?
கல்லாக இருந்த என் மனத்தை கூட
கரைத்த அந்த முத்தங்களுக்கு முன்
இந்த குளிர் காற்று நிலைத்து நிற்குமா???

No comments:

Post a Comment