Search This Blog

Sunday, January 23, 2011

பிடிச்ச பாடல் வரி

அண்மைக்   காலமாக ஏராளமான பாடல்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன 
சில பாடல்கள் இசையால் வசப்படுத்துகின்றன , சில பாடல்கள் வரிகளால் கட்டி போடுகின்றன 
அந்த வகையில் ""தென்மேற்கு பருவக்காற்று ""   படத்தின் ஏடி கள்ளச்சி பாடலில் வரும் ஒரு வரி
""கொடியோடும் சக்கர வள்ளி தெரியாம  கிழங்கு வைக்கும்   அதுபோல பொம்பள சாதி புரியாம மனசு வைக்கும் "" கவிப்பேரரசுவின் வரிகள் என்றால் சொல்லவும் வேண்டுமா? என்னை மறந்து ரசித்த வரிகள்
எப்படி இப்படி அவரால் மட்டும் முடியுது? வாழ்த்துவதற்கு எனக்கோ வயது போதாது என்றாலும் இந்த வரிகளை தந்த  கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றிகள்

pidiththa

pidiththa

எங்கோ படித்தது

ஒரே ஒரு வரம் வேண்டும் எனக்கு
உன்னை சந்திக்கும் நேரங்களை
மட்டும் நிறுத்தி வைக்க

Saturday, January 22, 2011

சோக காதல் கதை

ஒரு குட்டி சோகமான காதல் கதை சொல்லட்டுமா ? எனக்கு என்னோட நண்பி ஒருத்தி sms அனுப்பியிருந்த நான் உங்களோட பகிர்ந்து கொள்ள ஆசைபடறேன்
ஒரு சிட்டு குருவி வெள்ளை ரோஜாவ காதலிச்சுதாம் ,,
அது ரோஜாகிட்ட "" I LOVE YOU ""  ன்னு சொல்லிச்சாம்
அதுக்கு ரோஜா ,, நான் சிவப்பானதுக்கு அப்புறமா தன உன்ன லவ்
பண்ணுவேன்னு ...
அப்போ குருவி ரோஜாவோட முள்ளில் தன்னோட உடம்பை குத்தி
வந்த ரத்தத்த ரோஜா மேல தெளிச்சுதாம்
ரோஜா சிவப்பாயிட்டுதாம் ,,
இப்போ ரோஜா சிட்டு குருவிய லவ் பண்ணிச்சாம்
ஆனால் குருவி இல்லையாம் தன ரத்தம் எல்லாம் ரோஜாமேல தெளிச்சுட்டு
செத்து போய்டுதாம்

இப்படியும் நடக்கிறது

எப்போதும் ரசிப்பது கவிதைகளை அதும் வேறு யாருடயதாவதை தான்
அந்த வகையில் நான் ரசித்த சில கவித்துளிகள் கொஞ்சம் உங்கள் மீதும் சிந்துகிறேன் 
  • *****சாலையை கடக்க உதவிய பின்
  • பார்த்து போங்க என்ற 
  • என்னைப்பற்றி 
  • என்ன நினைத்திருப்பார் 
  • அந்த பார்வை அற்றவர்**********  

என் வீட்டு தென்னை மரம் ""


என் மனம் லட்சம் லட்சமான 
சிக்கல்களில் பின்னிக்கொண்டிருந்தது  
வீட்டுக்கு வெளியில் வந்து
திண்ணையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன்
""தொப்பென்ற "" ஒரு சத்தம் கலைத்தது
என் சிந்தனையை :
நொடிப்பொழுதில் திரும்பி பார்த்தேன் 
""என் வீட்டு தென்னை மரம் ""
தேங்காயோடு சண்டை பிடித்து கோபத்தில்
நீ வேண்டாமென்று வீசிஎரிந்திருக்கிறது



கலைந்த என் சிந்தனை
படஎடுக்கிறது என் வீட்டு
தென்னை மரத்தின் பக்கம்
என் அம்மா சொல்லியிருக்கிறாள்
எனக்கும் என் வீட்டு தென்னை மரத்துக்கும்
ஒரே வயதாம் என்று
நான் பிறந்த வருடத்தில் என் தாத்தா
நாட்டினாராம் அந்த மரத்தையும் '
என்னைப் பார்த்து பார்த்து
என்னை விட உயரமாய் வளர்ந்து விட்டது .

உயரமாய் இருப்பதால் நாலாபக்கமும்
நடக்கும் நடப்புக்கள் அவ்வப்போது என் வீட்டு
தென்னை மரத்தின் காதுக்கு எட்டிவிடுகிறது
சோகசெய்திகேட்டு தலை சாய்த்து
அனுதாபம் தெரிவித்து பார்த்திருக்கிறேன்
திருமணங்கள் ,ஊர்த்திருவிழாக்களின் போது
எகிறிக்குதித்து ஆரவாரித்ததையும்  பார்த்திருக்கிறேன்
பச்சைக்கிளிகள் மணிப்புறாக்கள்;சிட்டுக்குருவிகள்
வந்தமர்ந்தால் ஏதோ அவட்ட்ருக்கு
சிம்மாசனமாய் அவதாரமெடுத்த மமதையில்
குலுங்கி குலுங்கி சிரித்தும் பார்த்திருக்கிறேன்

பின்னிரவில் ஒரு அழுகுரல்
சன்னமாய் என் செவிகளில் கேட்க
என் அறையின் ஜன்னலைத்திறந்து
யாரென்று பார்த்தேன் ...........அட
"" என் வீட்டு தென்னை மரம் ""
குமுறி குமுறி அழுதுகொண்டிருந்தது
மெதுவாய் கேட்டேன் என்ன? என்று
லட்சியவாதிகள் இதயம் நரம்புகளால் அல்ல
இடிதாங்கி கம்பிகளால் பின்னப்பட்டிருக்க வேண்டும்
என்று மீண்டும் அழ ஆரம்பித்தது ,
நிறுத்து மரமே ! -உனக்கென்ன
இலட்சியவாதிகள் பற்றி தெரியும்? என்றேன்
உனக்கு வேண்டுமானால் இரண்டே இரண்டு செவிகள்
இருக்கக்கூடும் ஆனால் எனக்கோ உடம்பெல்லாம் காதுகள்
ஆங்காங்கே அவனவன் அழும்
அவல குரல் என்னை  ஏதோ செய்கிறது
என்றது "" என் வீட்டு தென்னை மரம்""


மரத்துக்கு, அதுவும் என் வீட்டு தென்னை மரத்துக்கு
இத்தனை இறங்கும் மனமா?  
மனிதனை விட ""என் வீட்டு தென்னை மரம் "'
ஒருபடி உயர்ந்த்தது தான் என்று எண்ணியபடி
ம்ம்..........ம்ம்......... என்று கதை கேட்பதை போல்
தலையசைத்து கேட்டுகொண்டிருந்த என்னிடம்
அதிஷ்டம் ,விதி, காலநேரம் ,
இந்த வார்த்தைகளை
உண்டு பண்ணியவனும் சரி ,
உதிர்ப்பவனும் சரி , வாழ்வியல் போராட்டங்களில்
பின் வாங்கியே வாழ்கிறார்கள்
என்று ஒரு புது தத்துவத்தையும் கற்பித்தது 
"" என் வீட்டு தென்னை மரம்""  எனக்கு 



சரி இவ்வளவு பேசுகிறாயே ! உனக்கு
சோகங்கள் , போராட்டங்கள் எதுவுமே இல்லையா?
என்றேன் அப்பாவியாக 
பலமுறை புயலடித்தும் ஓரமாய் 
ஒதுங்கி ஊய்ந்துவிடவில்லையே ! நான் 
போராடுகிறேன்
போராட்டமில்லாத உயிரில்லையே 
காற்றடித்தால் காற்றோடு போராடுகிறேன் ,
புயலடித்தால் புயலோடு போராடுகிறேன் ,
எனக்கே இவ்வளவு தைரியம்   இருக்கும் போது
உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
மனிதனுக்கு போராடும் குணம் இருக்கிறது
போரட்டமில்லா  வாழ்க்கை ,
நீரோட்டமில்லா  நதி , -என்று முடித்தது
"" என் வீட்டு தென்னை மரம் ""


என்னையுமறியாமல் சிரித்து விட்டேன்
"" என் வீட்டு தென்னை மரம் "" கோபத்தில்
நீ  சிரிக்கிறாய்... என் நாடு அழுகிறது .....
நீ வாழ்கிறாய் என் மண் அழிகிறது ..
நீ அடைந்து விட்டாய் என் மக்கள் இழந்து விட்டனர்  என்று
மீண்டும் மீண்டும் விம்மத் தொடங்கியது ....
நிறுத்து மரமே !
உனக்கு நாட? உன் மண்ணா? உன் மக்களா?
 இது என்ன புது கதை என்றேன்
பாவம் நீ பேதை பெண் குழந்தை தனம்
உன் முகத்தில் தெரிகிறது
எப்போது இந்த மண்ணில் விதைக்கப்பட்டேனோ
அப்போதே நம் மண்ணின் மீது எனக்கு
பற்று வந்து விட்டது
எத்தனை வீட்டின் மேற்கூரைகள்
உடைத்தெரிக்கப்பட்டதை நான் அல்லவோ 
பார்த்திருக்கிறேன் - அதனால் எத்தனை
மாடப்புறாக்கள் பதறி பறந்தடித்தன 
என்று எனக்கல்லவோ தெரியும்
மூச்சு  திணற  மூர்ச்சையாகி போன 
உயிர்களின் சத்தம் இன்றும்  கூட  
எனக்கு கேட்கிறது _ பெண்ணே
மனிதர்களுக்கு இதயத்தை அறுத்து வீசி விடச்சொல்
என்றது ,,
"' என் வீட்டு தென்னை மரம் "'


அன்று முதல் இன்று வரை
"" என் வீட்டு தென்னை மரம் ""
எனக்கொரு போதிமரம்
தலை குனிந்து மன்னித்துகொள் மரமே
என்றேன் சரி பஞ்சனைக்கு போ " காலைக்குளிர் "
உனக்கு ஒத்துவராது என்றது .
மனிதாபிமானம் நிறைந்து 
இப்போதும் எனக்கு பிடித்த மரம்
நான் நேசிக்கும் மரம்
"" என் வீட்டு தென்னை மரம் ""
அது மரமல்ல ஞானி

 

இந்த கவிதை சக்தி காற்றலையில் கவிராத்திரியில் ஒலிபரப்பானது இந்த தலைப்பில் நான் கவி வரைய 
காரணமானவர் கவிஞர் சடாகோபன்  கவிராத்திரியை நடத்தும் அவர் வழங்கிய தலைப்பு .  பின்னர் என்னை மறந்து நானு ஒரு தென்னையாய் அவதாரமெடுத்த கவிதை தான் இது . சடா அண்ணாவுக்கு நன்றிகள் இந்த சமயத்தில் உரித்தாகட்டும் ...  
இப்படிக்கு dilz 

படித்ததில் பிடித்தது

நீ பிரிந்திருந்து பிரியம் 
காட்டுவதை விட கூடவே 
இருந்து சண்டை போடு 
அது போதும் நான் உயிர் வாழ.  

Friday, January 21, 2011

பிடிச்ச கவிதை

மரணம் இப்போ எனக்கு வர வேண்டும்
அப்போதாவது நீ எனக்கு மாலை போடுவாய்
அந்த பாழாய்ப்போன மரணம் கூட என்னை
ஏற்றுகொள்ள மறுக்கிறது உன்னை போல'

எங்கோ கேட்ட கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு

என்னால் முடியவில்லை நீ
கொடுப்பது குப்பையாக
இருந்தாலும் அதை வீசுவதற்கு
 
 
 

பிடிச்ச விஷயங்கள்

நினைவுகளில் சிந்திடும் கண்ணீர்த்துளி பிடிக்கும்
தனிமையின் நினைவுகள் பிடிக்கும்
கோபங்களை புன்னகையில் வென்றிட பிடிக்கும்
புரிந்து கொண்டு விட்டு கொடுப்பது பிடிக்கும்
முயற்சிகளை விடாது முயற்சிப்பது பிடிக்கும்
வாழ்வில் சின்ன சின்னதாய் மாற்றங்கள் பிடிக்கும்
செய்கின்றவைகளை நேர்த்தியாய் செய்திட பிடிக்கும் 
சுத்தம் பிடிக்கும் (MANASU)
தொலைதூர பயணங்கள் பிடிக்கும்
பயணத்தின் போது இசை கேட்டிட பிடிக்கும்
பூவிதழில் உள்ள பனித்துளி பிடிக்கும்
பட்டாம் பூச்சியின் படபடப்பு பிடிக்கும்
முழு நிலவொளியில் படகு பயணம் பிடிக்கும்
மின்சாரமில்லா இரவில் மெழுகுவர்த்தியின் ஒளி பிடிக்கும்
கரை மணலில் அமர்ந்து கடலலைகள் ரசிக்க பிடிக்கும்
ஜில்லென்ற மழையில் நனைய  பிடிக்கும்
விதவிதமாய் புகைப்படம் எடுக்க பிடிக்கும்
எடுத்ததை திரும்ப திரும்ப பார்க்க பிடிக்கும்
கவிதைகள் பிடிக்கும்
மனம் விரும்புவதை எழுதிட பிடிக்கும்
தூக்கத்தில் கனவுகள் பிடிக்கும்
பல சமயங்களில் குழந்தையாய் மாறிட பிடிக்கும்
மழழையின் மொழி பிடிக்கும்
காதலுடன் இதழ்கள் இணையும் முத்தம் பிடிக்கும்
அதிகாலை காதல் பிடிக்கும்
மௌனம் ரொம்ப பிடிக்கும்
அதிர்ந்து பேசாத வார்த்தைகள் பிடிக்கும்
இதழ் பிரியாத புன்னகை பிஒடிக்கும்
புன்னகையில் மறைந்திருக்கும் நிஜமான நேசம் பிடிக்கும்
கண்களை நேராக பார்த்து பேச பிடிக்கும்
பேசுவதே கண்களில் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
என் அன்பிற்கினிய வாசக நெஞ்சங்களே நான் நிஜமாக நேசிக்கும் எனக்கு ரொம்ப பிடித்த
விஷயங்களை மட்டும் தான் இங்கே பதிவிட போகிறேன் . உங்களுக்கு பிடித்திருந்தால் படியுங்கள் பிடிக்காவிட்டால் விமர்சியுங்கள்  இப்படிக்கு அன்புடன் தோழி .........