அண்மைக் காலமாக ஏராளமான பாடல்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன
சில பாடல்கள் இசையால் வசப்படுத்துகின்றன , சில பாடல்கள் வரிகளால் கட்டி போடுகின்றன
அந்த வகையில் ""தென்மேற்கு பருவக்காற்று "" படத்தின் ஏடி கள்ளச்சி பாடலில் வரும் ஒரு வரி
""கொடியோடும் சக்கர வள்ளி தெரியாம கிழங்கு வைக்கும் அதுபோல பொம்பள சாதி புரியாம மனசு வைக்கும் "" கவிப்பேரரசுவின் வரிகள் என்றால் சொல்லவும் வேண்டுமா? என்னை மறந்து ரசித்த வரிகள்
எப்படி இப்படி அவரால் மட்டும் முடியுது? வாழ்த்துவதற்கு எனக்கோ வயது போதாது என்றாலும் இந்த வரிகளை தந்த கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றிகள்

No comments:
Post a Comment